தமிழ்நாடு
கும்பகோணத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா: ஆசிரியர்களுக்கும் பாதிப்பு!
கடந்த சில நாட்களாக தஞ்சை மற்றும் கும்பகோணம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா பரவி வருவதாகவும் செய்தி வெளீயானது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு அதிரடியாக விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏற்கனவே தஞ்சை மற்றும் கும்பகோணம் பகுதிகளில் நூற்றுக்கணக்கில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது கும்பகோணத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் பணிபுரிந்து வரும் 8 ஆசிரியர்களுக்கும் மற்றும் 19 பொதுமக்களுக்கு கொரோனா பாதிப்பு என தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 பேர்களும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சை மற்றும் கும்பகோணம் பகுதியில் மேலும் கொரனோ வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.