தமிழ்நாடு
முதல்வர் குறித்த சர்ச்சை பேச்சு: ஆ ராசாவுக்கு தேர்தல் ஆணையம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ ராசா பேசியதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து தேர்தல் ஆணையம் அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதா; பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா, முதல்வரின் பிறப்பு குறித்தும் ஸ்டாலின் பிறப்பு குறித்தும் ஒப்பீடு செய்து ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையான நிலையில் முதல்வர் இதுகுறித்து மனவருத்தத்துடன் தனது வருத்தத்தை வெளியிட்டார்.
மேலும் ஆ ராசாவுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினர் உள்பட பலர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ஆ ராசா முதல்வரிடம் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார். இந்த நிலையில் ஆ ராசாவின் சர்ச்சை பேச்சு குறித்து அதிமுகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர், அவர் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் ஆ ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி, தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை பெற்றது. இந்த அறிக்கையின் அடிப்படையில் முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து ஆ ராசா விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் இன்று மாலை 6 மணிக்குள் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.