கிரிக்கெட்
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சமீபத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் எதிர்பாராதவிதமாக காயமடைந்தார் என்பதும் அதன் பின்னர் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வு எடுத்து வருகிறார் என்பதும் தெரிந்தது.
ஸ்ரேயாஸ் அய்யர் நான்கு மாதங்கள் கிரிக்கெட் விளையாட கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதால் அடுத்து நடந்த ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. மேலும் ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லி கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக புதிய கேப்டனாக நியமனம் செய்வது யார் என்று கடந்த சில நாட்களாக டெல்லி அணியை ஆலோசனை செய்து வந்தது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி டெல்லி அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 14வது ஐபிஎல் தொடரின் டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஸ்ரேயாஸ் அய்யர் போட்டியில் இருந்து விலகியதால் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்படுகிறார் என டெல்லி அணி அறிவித்துள்ளது.