தமிழ்நாடு
’இருட்டு அறையில் முரட்டு குத்து’ நடிகைக்கு கொரோனா தொற்று!
’இருட்டு அறையில் முரட்டு குத்து’ உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகிய ’சக்கை போடு போடு ராஜா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை வைபவி சாண்டில்யா. இவர் அதன்பின்னர் பல தமிழ் கன்னட திரைப்படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பாக ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் இவர் தென்றல் இருக்கின்ற கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து பரிசோதனை செய்து கொண்டதாகவும் பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவர் விரைவில் குணமாக திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.