தமிழ்நாடு
மு.க.ஸ்டாலினை சாதிய ரீதியாக திட்டி பிரச்சாரம் செய்த சி.வி.சண்முகம்; சர்ச்சை வீடியோ!
தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில், சில சர்ச்சை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
சில நாட்களுக்கு முன்னர் சென்னை, ஆயிரம் விளக்குத் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாய் குறித்து அவதூறாக பேசினார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு ஆ.ராசா, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இந்தப் பிரச்சனை தற்போது சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சிரச்சிட்டு இருந்தியா, உன் குடும்பத்தொழில் பண்ணிட்டிருந்தியா, வாழைப்பழம் வெச்சிட்டிருந்தியா, நாயேன்னு
ஸ்டாலினையும், கருணாநிதியையும் சாதி சொல்லி திட்டும் இந்த அதிமுக வினருக்கு எதிராக உடனடியாக
திமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த வேண்டும்.@arivalayam @Udhaystalin pic.twitter.com/7ik4y46Ne0— Johny (@am_jhony) March 29, 2021
வீடியோவில் திமுக ஆட்சி காலத்தில் முதல்வராக இருந்த கருணாநிதி குறித்தும் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் குறித்தும் அடுக்கடுக்காக கொச்சையான வார்த்தைகள் சொல்லி விமர்சித்த சண்முகம், ஒரு கட்டத்தில், ‘சரச்சிட்டு இருந்தியா… உன் குடும்ப தொழில செஞ்சிட்டு இருந்தியா?’ என சாதிய ரீதியிலான வன்மம் பொருந்திய வார்த்தைப் பயன்படுத்தி உள்ளார்.
இந்த வீடியோவால் திமுகவினர் பலர் கொதிப்படைந்துள்ளனர். பல்வேறு தரப்பினரும் சண்முகத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றார்கள்.