தமிழ்நாடு
நாங்கள் இடைத்தேர்தலை சந்திக்க தயார்.. தினகரன் அதிரடி பேட்டி!
சென்னை: டிடிவி தினகரன் சென்னையில் பேட்டியளித்துள்ளார். அதில், நாங்கள் எதிர்பார்த்த தீர்ப்பு வரவில்லை. ஆனால் இது எங்களுக்கு பின்னடைவு இல்லை. அரசியலில் பின்னடைவு என்று எதுவும் இல்லை.
18 பேருடன் கலந்து பேசி செயல்படுவோம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 18 பேருடனும் கலந்து பேசுவேன். எங்களுக்குள் பிளவு இல்லை, 18 பேரும் என்ன நினைக்கிறார்களோ அதை செய்வோம்.
நாங்கள் இடைத்தேர்தலில் நிற்போம். 18 தொகுதி மேலும் 2 தொகுதியிலும் நாங்கள் நிற்போம். தேர்தலில் நிற்க அமமுக தயாராகி இருக்கிறது.
துரோகி யார் என்று மக்களுக்குத் தெரியும். தாங்கள் செய்வது பச்சைத் துரோகம் என்பதை ஆளுங்கட்சி உணர வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பை வைத்து துரோகி யார் என்று முடிவு செய்ய முடியாது.
சபாநாயகர் உத்தரவு செல்லும் என்றுதான் ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இடைத் தேர்தலை தமிழக மக்களும், அமமுகவும் எதிர்பார்த்துக் காத்துள்ளோம். இடைத் தேர்தலில் எங்களை நாங்கள் நிரூபிப்போம், என்றுள்ளார்.