இந்தியா
நாளை முதல் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு: எந்த மாநிலத்தில் தெரியுமா?
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது என்பதும், இதனால் அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே புனே உள்பட ஒரு சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நாளை முதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் மால்கள் உணவுகள் ஆகியவை இரவு 8 மணிக்கு மூடிவிடவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இந்த நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் எந்தவித கடைகளும் திறந்து இருக்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கை அடுத்து மீண்டும் பகல் நேரத்திலும் ஊரடங்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மகாராஷ்டிர மாநில மக்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.