தமிழ்நாடு
தமிழகத்தில் முழு ஊரடங்கா? மினி ஊரடங்கா? சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த இனி வாய்ப்பில்லை என்றும் ஆனால் மினி ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனை செய்து வருவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் ஆயிரத்து 600 பேரும் சென்னையில் மட்டும் 600 பேருக்கு மேலும் கொரனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரனோ எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதை அடுத்து தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் முழு ஊரடங்கு என்பது யூகத்தின் அடிப்படையில் பரவி வரும் தகவல் ஆகும். இதனை யாரும் நம்ப வேண்டாம், அனைவரும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கண்டிப்பதோடு தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரனோவை வென்றுவிடலாம்.
முழு ஊரடங்கு அமலுக்கு வராது என்றாலும் மினி ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.