சினிமா
கூத்துப்பட்டறை ஆசான் முத்துசாமி காலமானார்
கூத்துப்பட்டறை நிறுவனர் ந. முத்துசாமி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 82. பத்ம ஸ்ரீ விருது பெற்ற இவர் தஞ்சை மாவட்டம் புஞ்சை கிராமத்தில் பிறந்தவர். இவர், தெருக்கூத்தை தமிழ் கலையின் முக்கிய அடையாளமாக ஆக்கியவர். இவர் 2000 ஆண்டின் சாகித்யஅகாடமி விருது வென்றவர்.
இவரது ‘கூத்துப்பட்டறை’ என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாகஇருந்து வருகிறது. விஜய் சேதுபதி, பசுபதி, விமல் உள்ளிட்ட பல நடிகர்கள் இவரது கூத்துப்பட்டறையில்பயிற்சி பெற்றே தற்போது மிகப்பெரிய நடிகர்களாக உயர்ந்துள்ளனர். முத்துசாமி மறைவுக்கு திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி, மூடர்கூடம் நவீன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.