தமிழ்நாடு
கொரோனா பரிசோதனை செய்து கொள்ள பிரேமலதாவுக்கு அழைப்பு!
கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளுமாறு தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் சகோதரர் சதீஷ் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் சுதீஷுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து தேமுதிக பொருளாளரும், சுதீஷின் சகோதரரும் விருத்தாசலம் தொகுதி வேட்பாளருமான பிரேமலதாவும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள விருத்தாச்சலம் சுகாதாரத்துறை அலுவலர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பை ஏற்று விரைவில் பிரேமலதா கொரோனா பரிசோதனை செய்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிரேமலதா மட்டுமே தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.