தமிழ்நாடு
சேலத்தில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் சந்திப்பு: முக்கிய ஆலோசனை என தகவல்!
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலை சந்திக்க அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் தற்போது 5 முனை போட்டி ஏற்பட்டு உள்ளது என்பதும் 5 முதலமைச்சர் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கி விட்டது என்பதும் ஒரு பக்கம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்னொரு பக்கம் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சேலம் தொகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று இரவு திடீரென துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சந்தித்தார். சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த இந்த சந்திப்பில் இருவரும் முக்கிய ஆலோசனைகள் ஈடுபட்டதாகவும் தேர்தல் தொடர்பாக ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது
தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கணிப்புகள் அதிமுகவுக்கு பாதகமாக வந்து கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கி விடுவது மற்றும் தேர்தலை எதிர்கொள்வது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனையில் இருவரும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சந்திப்பின்போது ஓபிஎஸ் இபிஎஸ் என்ன பேசினார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.