தமிழ்நாடு
318 ரன்கள் இலக்கு கொடுத்த இந்தியா: சதத்தை மிஸ் செய்த தவான்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ளது.
இன்று புனேவில் பகலிரவு போட்டியாக தொடங்கியுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது.
இன்றைய பேட்டிங்கில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அசத்தினர். ஷிகர் தவான் 98 ரன்கள், கேஎல் ராகுல் 62 ரன்கள், க்ருணால் பாண்ட்யா 58 ரன்கள், விராத் கோலி 56 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனை அடுத்து இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னும் சில நிமிடங்களில் 318 என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாட உள்ள நிலையில் இங்கிலாந்து அணி வெற்றிக்கனியை பறிக்குமா? அல்லது இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.