இந்தியா
துணைநிலை ஆளுனருக்கு கூடுதல் அதிகாரம்: டெல்லி மாநில அரசு டம்மியாக்கப்படுகிறதா?
மாநிலங்களில் உள்ள ஆளுநர்களை விட யூனியன் பிரதேசங்களில் உள்ள துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் அதிக அளவில் இருப்பதால் அவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது
கடந்த சில ஆண்டுகளாக புதுவையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதல் அமைச்சர் நாராயணசாமி இடையே கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக பனிப்போர் நடந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லி மாநில அரசைப் டம்மியாக முயற்சி நடக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசு டெல்லியில் ஆட்சி செய்து வரும் நிலையில் டெல்லி அரசின் அதிகாரத்தை குறைத்து துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது
இந்த மசோதா மூலம் டெல்லி அரசு எடுக்கும் முடிவுகளுக்கு துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் கட்டாயம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மாநில அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது. டெல்லி அரசை டம்மியாகும் இந்த மசோதா நிறைவேற்றதற்கு டெல்லியில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது