Connect with us

இந்தியா

கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் போடுவது குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

Published

on

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பு மருந்தையும், ஐசிஎம்ஆர், புனேவில் உள்ள வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்ஸின் எனும் தடுப்பு மருந்தையும் தயாரித்துள்ளன. இந்த இரண்டு தடுப்பு மருந்துகளும் இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் கோவிஷீல்ட் மருந்து அனைத்து வித சோதனைகளையும் முடித்துள்ளதால் அதிக மக்கள், அந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டு டோஸ்களில் போடப்படும். இது குறித்து முன்னர் விளக்கியிருந்த மத்திய அரசு, முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்கும் 28 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்று கூறியது.

இந்நிலையில் அரசு தரப்பு, கோவிஷீல்டு மருந்து சரியான வகையில் வேலை செய்ய வேண்டும் என்றால் இரண்டு டோஸ்களுக்கு மத்தியிலான காலத்தை 6 முதல் எட்டு வார காலமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. அதே நேரத்தில் 8 வாரங்களுக்குப் பின்னர் தடுப்பூசி செலுத்தப்படக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கையை மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளதாம்.

நாட்டின் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 45 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பிரிவினருக்கு முதல் டோஸ் கொடுத்து முடிக்கப்பட்டு நிலையில், இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அரசு.

 

இந்தியா4 நிமிடங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்10 நிமிடங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்20 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்32 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்44 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்56 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!