தமிழ்நாடு
9,10,11 வகுப்புகளுக்கு ஆல்பாஸ்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 9,10,11ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்றும் அந்த வகுப்பில் படிக்கும் மாணவ மாணவிகள் அனைவரும் ஆல்பாஸ் என்றும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. மேலும் இதுகுறித்து அரசாணையும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் 9,10,11ஆம் வகுப்புகளில் படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த அரசாணையை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் பதினொன்றாம் வகுப்பிற்கு தனியார் பள்ளிகள் தனித்தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.