தமிழ்நாடு
பிரச்சாரம் சென்ற இடத்தில் கமலுக்கு ஏற்பட்ட சோதனை: மீண்டும் மருத்துவமனையில்?
![Kamal Haasan - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/03/Kamal-Haasan.jpg)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது காலுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பதும் அதன் பின்னர் ஓய்வு எடுத்துவிட்டு தற்போதுதான் பிரச்சாரத்தில் களமிறங்கி உள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று காலை அவர் கோவை தெற்கு தொகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது ஆர்வமிகுதியால் அவரிடம் அருகில் வந்த சிலர் செல்பி எடுக்க முயன்றனர். அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்த காலை சிலர் மிதித்து விட்டதாக தெரிகிறது.
இதனை அடுத்து அவர் வலியால் துடித்தார் என்றும் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கால் வீங்கி உள்ளதால் அவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து அவர் தனது பிரச்சார திட்டங்களை மாற்றி உள்ளதாகவும் இடையிடையே ஓய்வு எடுத்துவிட்டு அதன் பின்னர் பிரச்சாரம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கமல்ஹாசன் ஒருவர் மட்டுமே முக்கிய பிரச்சார மையமாக இருக்கும் நிலையில் அவருக்கு திடீரென இவ்வாறு சோதனை ஏற்பட்டுள்ளது அவரது கட்சித் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.