தமிழ்நாடு
திருந்தி விடுங்கள், இல்லை எனில் நான் விடமாட்டேன்: அதிகாரிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!
இப்பொழுது முதல் திருந்திவிடுங்கள் இல்லையென்றால் நான் முதல்வரான பிறகு சும்மா விடமாட்டேன் என திமுக தலைவர் ஸ்டாலின் அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த சில நாட்களாக தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அவர் ஆளுங்கட்சியை மட்டுமின்றி ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருக்கும் அரசு அதிகாரிகள் குறித்தும் அவ்வப்போது விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று அவர் பேசிய பொதுக்கூட்டம் ஒன்றில், இப்பொழுதே அரசு அதிகாரிகள் திருந்தி விடுங்கள் இல்லையெனில் நான் முதல்வராக வந்த பிறகு உங்களை சும்மா விட மாட்டேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ஊழலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பணப்பட்டுவாடா செய்ய உதவி செய்யும் காவலர்களின் பட்டியலும் என் கையில் உள்ளது என்றும் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் மீது தகுந்த விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஆட்சிக்கு வரும்முன்னரே அதிகாரிகளை திமுக தலைவர் ஸ்டாலின் மிரட்டும் வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.