சினிமா செய்திகள்
ஐந்து மொழிகளிலும் டப்பிங் பேசியுள்ள அறிமுக நடிகர்!
தமிழ் திரையுலகின் முன்னணி பி.ஆர்.ஓகளில் ஒருவர் நிகில் முருகன் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் முதன்முதலாக ’பவுடர்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
பி.ஆர்.ஓ நிகில் முருகன் காவல்துறை அதிகாரியாக நடித்து வரும் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ளது. தமிழில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மற்ற நான்கு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய சினிமாவில் முதல்முறையாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் நிகில் முருகன் டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் யாரும் செய்யாத இந்த முயற்சியை அவர் செய்துள்ளதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
உயிருள்ள மனிதனை வெட்டிக்கொலை செய்து சமையல் செய்து சாப்பிடும் ஒரு அராஜக கும்பலை கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதை என்றும் போலீஸ் அதிகாரி வேடத்தில் நிகில் முருகன் மிக பொருத்தமாக சிறப்பாக நடித்துள்ளார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் டிரைலர் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.