Connect with us

இந்தியா

இன்று மட்டும் சுமார் 40,000 பேருக்கு கொரோனா தொற்று; இந்தியாவில் இந்த ஆண்டின் அதிகபட்ச பாதிப்பு!

Published

on

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உயர்ந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 15,388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,15,14,331 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 154 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,59,370 ஆக அதிகரிதுள்ளது.

தேசிய அளவில் மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில் மிக அதிக கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிராவில் மற்றும் 25 ஆயிரத்துக்கும் அதிகாமனவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேற்குறிப்பிட்ட 5 மாநிலங்களைத் தவிர அசாம், தமிழகம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை நாட்டில் 3.93 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்ப்பட்டுள்ளது. இன்னும் 23 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்து வருகிறது அரசு. 

தற்போது மீண்டும் பரவி வரும் கொரோனா தொற்று குறித்து சில நாட்களுக்கு முன்னர் மாநில முதல்வர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி, ‘நாடு முழுவதும் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக கொரோனா பெருமளவு கட்டுக்குள் வந்தது. தற்போது பல நாடுகளில் உள்ளது போலவே அடுத்த அலைகள் உருவாகும் சூழல் உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. 70 மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மற்ற பல நாடுகளில் ஏற்பட்டுள்ளதை போல இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை உருவாகும் நிலையில் அதனை தடுத்து நிறுத்த அனைத்து மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இந்த சமயத்திலேயே நாம் கொரோனாவை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அது மீ்ண்டும் நாடு தழுவிய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்’ என்றார். 

இந்தியா3 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்3 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா4 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்4 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!