Connect with us

தமிழ்நாடு

அமைச்சர் ஜெயக்குமாரால் எப்படி கர்ப்பமானேன்: இளம்பெண்ணின் பகீர் வாக்குமூலம்!

Published

on

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ரெக்கமெண்ட்டேஷனுக்கு சென்ற இளம்பெண் ஒருவரை கர்ப்பமாக்கி குழந்தை கொடுத்ததாக ஆடியோ ஒன்று வெளியாகி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதனை அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார்.

ஆனால் தனக்கு அமைச்சர் ஜெயக்குமாரால் நேர்ந்ததை அந்த இளம்பெண் கூறியதாக பிரபல இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில், தனது மகளுக்கு வரன் ஒன்றும் அமையாததால் ஒரு சாமியாரை நாடி சென்ற தாயும் மகளும் ஒன்றரை லட்சம் ரூபாயை அவரிடம் பறிகொடுத்துள்ளனர். இதனையடுத்து இதுதொடர்பாக ராயபுரம் காவல்நிலையத்தில் புகார் எடுக்க பரிந்துரை செய்ய அமைச்சர் ஜெயக்குமாரை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள் இருவரும்.

அமைச்சரை பார்த்து நடந்ததை சொல்லியிருக்கிறார்கள். சரிம்மா நான் பேசி பணத்தைத் திரும்பத் தர ஏற்பாடு பண்றேன் என சொல்லியிருக்கிறார் அமைச்சர். இதற்காக தாயும், மகளும் பலமுறை அமைச்சரின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். ஒருநாள் திடீரென அந்த பெண்ணை தொடர்புகொண்ட அமைச்சர் ஜெயக்குமார், உடனே புறப்பட்டு என் வீட்டுக்கு வாம்மா இன்ஸ்பெக்டர் வந்திருக்காரு. இங்கேயே பேசி பணத்தை வாங்கிக் கொடுத்துடறேன் என கூறியுள்ளார்.

தனது தாய் அப்போது வீட்டில் இல்லாததால் வர மறுத்துள்ளார் அந்த பெண். ஆனால் அமைச்சர், உனக்காக அதிகாரியே வந்திருக்கிறார் வாம்மா என அழுத்தம் கொடுத்திருக்கிறார். இதனையடுத்து அந்த பெண் தனியாக அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கு சென்றபோது யாரும் அங்கில்லை அமைச்சரும், அந்த இளம்பெண்ணும் தனியாக இருந்துள்ளனர். அப்போது அமைச்சர் அந்த பெண்ணுக்கு குடிக்க ஜூஸ் கொடுத்துள்ளார்.

ஜூஸ் குடித்த சில நிமிடங்களில் மயங்கிவிட்ட அப்பெண், சில மணி நேரங்கள் கழித்து தான் வீட்டுக்குச் செல்லும்போது தனக்கு ஏதோ ஒரு அவலம் நடந்துவிட்டதை உடல் ரீதியாக உணர்ந்துகொண்டு தாயிடம் சொல்லிக் கதறியிருக்கிறார். இதனையடுத்து அமைச்சரின் வீட்டுக்கு சென்ற அந்த இளம்பெண்ணின் தாய், என்னங்க என் பொண்ணை இப்படி பண்ணிட்டீங்க? என கதறியிருக்கிறார். கவலைப்படாதம்மா நான் பாத்துக்குறேன். நானே கல்யாணம் பண்ணிக்கிறேன். வீடு வாங்கித் தர்றேன். கார் வாங்கித் தர்றேன் என ஆசை வார்த்தை கூறி அனுப்பி வைத்திருக்கிறார் அமைச்சர்.

அதன் பின்னர் பலமுறை அந்த பெண்ணை அழைத்து திருமண ஆசை காட்டி உல்லாசமாக இருந்துள்ளார் அமைச்சர். ஒவ்வொருமுறை அந்த பெண்ணை அழைக்கும்போதும் அமைச்சர் அந்த பெண்ணுக்கு சில மாத்திரைகள் கொடுத்து சாப்பிட வைத்திருக்கிறார். அது கரு உருவாவதை தடுக்கும் மாத்திரை என அறிந்த அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியுள்ளார். அதற்கு பின்னர் அமைச்சரின் பதிலில் சந்தேகம் வர தன்னை இவர் திருமணம் செய்துகொள்ள மாட்டார் என்று அந்த பெண்ணுக்கு புரிந்துவிட்டது.

இந்நிலையில் திடீரென ஒருநாள் ஜெயக்குமாரிடம் இருந்து அந்த பெண்ணுக்கு போன் சென்றிருக்கிறது. இந்த முறை அவர் திண்டுக்கலில் இருந்து அழைத்திருக்கிறார். அப்போது ஒரு முடிவோடு கிளம்பியிருக்கிறார் அந்த இளம்பெண். நவம்பர் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை திண்டுக்கல் விவேரா கிராண்ட் ஹோட்டலில் 219-ம் எண் கொண்ட அந்த அறையில் தங்கியிருந்தார்கள் இருவரும்.

அப்போது வழக்கம் போல் ஜெயக்குமார் மாத்திரையைக் கொடுக்க, அந்தப் பெண் மாத்திரை சாப்பிடுவது போல் நடித்தார். அதன் பின் சில பல முறை இப்படி நடக்க, மாத்திரையும் போடாமல் விட்டதால் அந்த இளம் பெண் கர்ப்பமானார். இதனையடுத்து அந்த இளம்பெண்ணும் அவர்து தாயும் ஜெயக்குமாரிடம் கர்ப்பமான விஷயத்தைச் சொல்ல அவர் அதை கலைக்க கட்டாயப்படுத்தியுள்ளார்.

கருவை கலைக்க மறுத்து தன்னை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தி வந்த அந்த பெண்ணுக்கு அதற்குள் குழந்தையும் பிறந்துவிடுகிறது. அரசு மாறிய பிறகு ஜெயக்குமார் மீது புகார் கொடுக்கலாம் என்று காத்திருந்த நிலையில் ஜெயக்குமார் தரப்பினரின் தொடர் மிரட்டலால்தான் இந்த விஷயங்களை வெளியே சொல்ல முடிவெடுத்ததாக அவர்கள் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் தனது செய்தியாளர் சந்திப்பில் இதனை மறுத்துள்ளார்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா16 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்16 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!