தமிழ்நாடு
‘நான் வைக்கிறேன்டா தேர்வு; பிட் அடிச்சா கூட ஸ்டாலின் பாஸ் ஆகமாட்டாரு..!’- சீமான் சரவெடிப் பேச்சு
நாட்டில் எந்தப் பொறுப்பு அல்லது பதவிக்கு வர வேண்டும் என்றாலும் தேர்வு எழுதித் தான் வர வேண்டும் என்கிற நிலை இருக்கிறது. அதைப் போல நான் ஆட்சிக்கு வந்தால் அமைச்சர்களாக தேர்வு எழுதித் தான் வர வேண்டும் என்ற நிலை உருவாக்கப்படும் என்று பேசியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
மதுராந்தகம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த சீமான் பேசியதாவது:-
நாட்டில் மருத்துவர் ஆக வேண்டும் என்றால் நீட் தேர்வு, வக்கீர் ஆக வேண்டும் என்றால் தேர்வு, ஐபிஎஸ் ஆக வேண்டும் என்றால் தேர்வு என எல்லாவற்றுக்கும் தேர்வு உள்ளது. ஆனால், அரசியல் தலைவராக வேண்டும் என்றாலோ, அமைச்சராக வேண்டும் என்றாலோ ஒரு தேர்வு கிடையாது.
நான் வைக்கிறேன் தேர்வு. அரசியல், பொருளாதாரம், இலக்கியம், உலக வரலாறு என அனைத்துப் பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும். அப்படி ஒரு தேர்வு வைத்தால் இப்போது பதவியில் இருப்பவர்கள் ஒருவராவது பாஸ் ஆவார்களா. எடப்பாடி பழனிசாமி பாஸ் ஆவாரா, மோடி பாஸ் ஆவாரா, ஐயா ஸ்டாலின் பார்த்து எழுதினால் கூட பாஸ் ஆவாரா?’எனக் கேள்வி எழுப்பினார்.