இந்தியா
சிபிஐ சிறப்பு இயக்குனருக்கு எதிராகவே லஞ்ச வழக்கு பதிவு.. சிபிஐ நடவடிக்கை!
டெல்லி: சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக சிபிஐ அமைப்பே அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையும் பதிந்து இருக்கிறது.
இறைச்சி ஏற்றுமதி வியாபாரம் செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷியின் அலுவலகம் மற்றும் வீட்டில் கடந்த 2014ல் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதை விசாரிக்க சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தலைமையில் இந்த விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய சதீஷ் சனா உள்ளிட்ட பல தொழிலதிபர்களிடம் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கி அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. இவரிடம் ராகேஷ் அஸ்தானா 3 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக சிபிஐ அமைப்பே அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.