தமிழ்நாடு
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.எல்.ஏ நீக்கம்!
முன்னாள் எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகியோர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ நீலகண்டன் உள்பட ஒருசிலர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளனர்.
அதிமுகவின் கொள்கைக்கு முரணாக செயல்பட்டும் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதாகவும் அவர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நீலகண்டன், ரஞ்சித்குமார், சுந்தரராஜ், வாசன், மணிகண்டன் ஆகிய ஐவர் நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.