தமிழ்நாடு
ஏழாவது முறையாக எடப்பாடியில் போட்டி: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏழாவது முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை சற்றுமுன் தாக்கல் செய்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் முறையாக கடந்த 1989ஆம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் அதிமுக ஜெ பிரிவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் 1991 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் அதே தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
1996இல் மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிச்சாமி தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ஏழாவது முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்காக சற்றுமுன் முதல்வர் பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவை தாக்கல் செய்த பின் எடப்பாடியில் உள்ள தேர்தல் அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் தனது தொகுதியில் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.