சினிமா
கவிஞர் பா.விஜய் மீ டூ கவிதை: வைரமுத்துவுக்கு ஆதரவாக!
மீ டூ விவகாரம் பெரிதாகி வரும் சூழலில் பிரபல கவிஞரும் நடிகருமான பா.விஜய் மீ டூ-வால் குற்றசம்சாட்டப்பட்டுள்ள வைரமுத்துவுக்கு ஆதரவாக கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபல பாடகி சின்மயி வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதில் பலரும் சின்மயிக்கு ஆதரவாகவும், சிலர் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் பா.விஜய் வைரமுத்துவுக்கு ஆதரவாக வெளியிட்டுள்ள மீ டூ தொடர்பான கவிதை பின்வருமாறு.
ஒரு மீ டூ கவிதை
எழுதட்டுமா என்றேன்
மீம்ஸ் போடுவார்கள்
மிரட்டினர் நட்புகள்
மீம்சுக்கு பேனாக்கள் மிரளாது
ஞாயிற்றுக் கிழமை என்பதால்
மீ டூ உடன்
மீனும் சேர்ந்து கொண்டது.
மீன் 2-வைப் பார்த்துக் கேட்டது
மீன் 1
மீ டூ மீ டூ என்றால் என்ன?
மீன் 2 சொன்னது
மீ டூ மீ டூ என்றால்..
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
என்றானே பாரதி
அதுதான் மீ டூ
புரிந்த மீன் 1
தெளிந்து கேட்டது..
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
என்றாயே பாரதி… ஒருசில
மாதர் செய்யும் மடமையை
யார் கொளுத்துவது?
மீனிங் புரிந்த மீன் 2
இது மீ டூ பிரச்சனை என்று
மீண்டது.
இனி தூண்டில்களுக்கு தூக்கமில்லை
-பா.விஜய்