தமிழ்நாடு
நேருக்கு நேர் விவாதம்: முதல்வர் சவாலை ஏற்றார் ஸ்டாலின், ஆனால்….
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா? என சவால் விடுத்திருந்தார்.
துண்டு சீட்டு இல்லாமல் என்னுடன் அவரால் நேருக்கு நேர் விவாதம் நடத்த முடியுமா? என்றும் அவர் பல மேடைகளில் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த சவாலுக்கு இதுவரை பதில் சொல்லாமல் இருந்த ஸ்டாலின், தற்போது முதல்வரின் இந்த சவாலை ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் அவர் ஒரு நிபந்தனை விதித்துள்ளார். தன் மீதான வழக்கை முதல்வர் பெற்ற தடையை அவர் வாபஸ் பெற வேண்டும் என்றும் அவ்வாறு வாபஸ் பெற்றால் அவருடன் விவாதம் நடத்த தடை என்றும் தெரிவித்துள்ளார்.
நேருக்கு நேர் விவாதம் நடத்துவதற்கும், முதல்வர் பதிவுசெய்த வழக்கிற்கும் என்ன சம்பந்தம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் முதல்வர் மற்றும் ஸ்டாலின் நேருக்கு நேர் விவாதம் நடக்குமா? அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளர்கள் ஒரே மேடையில் விவாதம் செய்வது போல் தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர்களும் விவாதம் செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.