இந்தியா
சபரிமலை கோவில் உரிமையை எங்களுக்கு வேண்டும்.. ஆதிவாசிகள் புதிய சர்ச்சை
![3 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/3-5.jpg)
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் ஆதிவாசிகளுக்கு உள்ள அதிகாரத்தை உரிமையை மீண்டும் வழங்க வேண்டும், என்று ஆதிவாசி மக்கள் புதிய போர் கோடி தூக்கி உள்ளனர்.
ஆதிவாசி கோத்ர மகாசபா இந்த கோரிக்கையை வைத்துள்ளது. 20ம் நூற்றாண்டு வரை சபரிமலையில் பூஜை செய்வது தொடங்கி கோவிலை பராமரிப்பது வரை அனைத்தையும் ஆதிவாசி மக்கள்தான் கவனித்து வந்தனர்.
பரிமலை கோவிலில் ஆதிவாசிகளுக்கு உள்ள அதிகாரத்தை உரிமையை மீண்டும் வழங்க வேண்டும், என்று ஆதிவாசி மக்கள் புதிய போர் கோடி தூக்கி உள்ளனர். ஆதிவாசி மக்கள் தங்கள் உரிமையை மீட்க கோரி மீண்டும் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.
பெண்கள் உள்ளே நுழைவது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு முக்கியம் கோவில் உரிமையை மீண்டும் பூர்வ குடிமக்கள் கைப்பற்றுவது என்று ஆதிவாசி கோத்ர மகாசபா கூறியுள்ளது.