கிரிக்கெட்
இங்கிலாந்து தொடரிலிருந்து பும்ராவின் திடீர் விலகல் ஏன்?- ‘டும் டும் டும்’ ரகசியம்
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜஸ்ப்ரீத் பும்ரா.
தன் அதிவேக பந்துவீச்சால் டி20 தொடர்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் பும்ரா. குறிப்பாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியதன் மூலம் அவர், இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
முதலில் டி20 போட்டிகளில் விளையாடிய பும்ராவுக்கு விரைவில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. சீக்கிரமாகவே இந்திய அணியின் பந்து வீச்சின் மெயின் ஸ்டாராக உருவெடுத்தார் பும்ரா.
View this post on Instagram
அவருக்கும், தென்னிந்திய திரைப்பட நடிகையான அனுபாமா பரமேஸ்வரனுக்கும் காதல் உறவு உள்ளதாகவும், விரைவில் இருவரும் மணம் முடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருந்தன.
இந்நிலையில் டிவி தொகுப்பாளினி சஞ்சனா கணேசனை, பும்ரா திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது குறித்து விரைவில் பும்ரா, உறுதிபட கூறுவார் என்றும் சொல்லப்படுகிறது.
தற்போது இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் இருந்து பும்ரா விலகியுள்ளார். தன் திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யும் நோக்கிலேயே பும்ரா, விடுப்பு எடுத்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.