தமிழ்நாடு
இயக்குனர் செல்வராகவன் கேட்ட மன்னிப்பு: பெரியார் குறித்து அவதூறா?
![selvaragavan - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/selvaragavan.jpg)
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடித்த ’நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்படுத்திய நிலையில் சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது இந்த படத்தில் நாயகன் கேரக்டரான ராமசாமி என்ற கேரக்டர் குறித்து நிருபர் ஒருவர் கேள்வி கேட்டபோது ராமசாமி என்ற தனிநபரை குறிப்பிட்டு தானே அந்த கேரக்டருக்கு பெயர் வைத்தீர்களா? என்று கேட்டார். அதற்கு செல்வராகவன் ஆமாம் என்று பதில் கொடுத்திருந்தார்.
இதனை அடுத்து பெரியார் ஈவேரா ராமசாமியை செல்வராகவன் அவமதித்து விட்டதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் வெளியாகி வந்தது. இதனை அடுத்து செல்வராகவன் தனது டுவிட்டரில் அந்த பேட்டியில் அந்த நிருபர் கேட்ட கேள்வி எனக்கு சரியாக புரியவில்லை தற்போது நீங்கள் சுட்டிக்காட்டிய பின்னர் தான் புரிகிறது என்று நான் அந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும் இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.