தமிழ்நாடு
டவுன்பஸ்ஸில் பயணம் செய்து பயணிகளின் குறைகளை கேட்ட ஆளுனர் தமிழிசை!
முதல்வர், ஆளுநர் என்றாலே பொதுமக்கள் அவர்களை நெருங்க முடியாது என்ற எழுதப்படாத விதி இருக்கும் நிலையில் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் டவுன்பஸ்சில் பயணிகளுடன் பயணிகளாக பயணம் செய்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
இன்று புதுவை துணைநிலை ஆளுனர் தமிழிசை அவர்கள் புதுச்சேரியில் உள்ள தவளைகுப்பம் என்ற பகுதிக்கு செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறினார். அவர் பயணிகளோடு பயணிகளாக உட்கார்ந்து கொண்டதோடு தனக்கும் தன்னுடைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் காசு கொடுத்து டிக்கெட் எடுத்தார்.
மேலும் பயணிகளிடமும் நடத்துனர் மட்டும் ஓட்டுநரிடமும் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். ஒரு சிலர் கூறிய குறைகளை மனுவாக கொண்டு வந்து கவர்னர் மாளிகைக்கு கொடுங்கள் என்றும், தேர்தல் முடிந்தவுடன் அவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பயணிகளோடு பயணியாக மிக எளிமையாக ஒரு மாநிலத்தின் ஆளுநர் பயணம் செய்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளதோடு அது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.