தமிழ்நாடு
ராதிகாவுக்கு துணை முதல்வர் பதவியா? கமல்ஹாசனிடம் சரத்குமார் பேச்சுவார்த்தை!
தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கூட்டணிகள் தவிர கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாகி இருக்கிறது.
இந்த கூட்டணியில் இதுவரை சரத்குமாரின் கட்சி மற்றும் ஐஜேகே கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் இணைந்துள்ளன. மேலும் அதிமுக திமுக கூட்டணியிலிருந்து அதிருப்திக்குள்ளாகி வெளியே வரும் கட்சிகள் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளர் என சரத்குமார் ஒப்புக் கொண்டார் என்று செய்திகள் சமீபத்தில் வெளியானது. ஆனால் அதே நேரத்தில் ராதிகாவுக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்ற கோரிக்கை சரத்குமார் தரப்பில் இருந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் மக்கள் நீதி மய்யம் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை என்றும் துணை முதல்வர் என்ற பதவியே மக்கள் நீதி மய்யம் ஆட்சியில் கிடையாது என்றும் கூறப்படுகிறது. இதனால் சரத்குமார் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் ராதிகாவுக்கு முக்கிய அமைச்சர் பதவியை தருவதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி எத்தனை தொகுதிகள் கைப்பற்றும் என்பதே தெரியாமல் இருக்கும் நிலையில் அதற்குள் முதல்வர், துணை முதல்வர் பதவிக்கான பேச்சுவார்த்தை நடத்துவது நகைச்சுவைக்குரியது என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.