தமிழ்நாடு
கொள்ளையடித்தவர்களை சிறையில் தள்ளுவது தான் நம் முதல் வேலை: உதயநிதி ஸ்டாலின்
![Udhayanidhi and DMK - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/12/Udhayanidhi-and-DMK.jpg)
கொள்ளையடித்தயவர்களை சிறையில் தள்ளுவது தான் நமது முதல் வேலை என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவ்வப்போது ஆவேசமான சமூக கருத்துக்களையும் அரசியல் கருத்துகளையும் ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.
குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக அரசுக்கு எதிராக அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு கருத்தும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிமுக அரசின் ஊழல் குறித்து அவர் சற்று முன் தனது டுவிட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:
மதுரைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒரு LED பல்ப் வாங்க ரூ.21,666 செலவு என்பது முதல் ஊரக வளர்ச்சி துணை இயக்குநர் பணியிட மாற்றத்துக்கு பல கோடி லஞ்சம் என்பது வரை உள்ளாட்சித்துறையில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. தேர்தல் நேரம், கடைசி கால கொள்ளையில் அடிமைகள் வேகம் காட்டுகின்றனர்.
மக்கள் பணத்தை சுருட்டி தம் முதலாளிகளுக்கு பங்கு வைப்பதில் எடுபுடிகள் மும்முரமாக உள்ளனர். கழக ஆட்சி அமைந்ததும் அடிமைகள் கொள்ளையடித்த மக்கள் பணத்தை மீட்டு அரசு கஜானாவில் சேர்ப்பதும் – கொள்ளையடித்தவர்களை சிறையில் தள்ளுவதுமே நம் முதல் வேலை.
மக்கள் பணத்தை சுருட்டி தம் முதலாளிகளுக்கு பங்கு வைப்பதில் எடுபுடிகள் மும்முரமாக உள்ளனர். கழக ஆட்சி அமைந்ததும் அடிமைகள் கொள்ளையடித்த மக்கள் பணத்தை மீட்டு அரசு கஜானாவில் சேர்ப்பதும் – கொள்ளையடித்தவர்களை சிறையில் தள்ளுவதுமே நம் முதல் வேலை. 2/2
— Udhay (@Udhaystalin) March 5, 2021