கிரிக்கெட்
205 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து: முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த இந்தியா
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
இதனை அடுத்து இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சற்று முன் 205 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தபோது முதல் ஓவரின் 3வது பந்திலேயே விக்கெட்டை இழந்தது. கில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.
இதனை அடுத்து தற்போது இந்திய அணி ரன் ஏதும் எடுக்காமல் ஒரு விக்கெட்டை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த போட்டி போலவே இந்த போட்டியும் இரண்டு நாட்களில் முடிவுக்கு வரும் நிலை தான் தற்போது தெரிகிறது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஸ்கோர் விபரம்:
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 205/10 75.5 ஓவர்கள்
பென் ஸ்டோக்ஸ்: 55 ரன்கள்
டான் லாரன்ஸ்: 46 ரன்கள்
ஒலியோ போப்: 29 ரன்கள்
பெயர்ஸ்டோ: 28 ரன்கள்
இந்திய பந்துவீச்சாளர்கள்:
அக்சர் பட்டேல்: 4 விக்கெட்டுக்கள்
அஸ்வின்: 3 விக்கெட்டுக்கள்
சிராஜ்: 2 விக்கெட்டுக்கள்
வாஷிங்டன் சுந்தர்: 1விக்கெட்டு