தமிழ்நாடு
3வது அணியா? தனித்து போட்டியா? காங்கிரஸ் அவசர ஆலோசனை!
கௌரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் திமுக கூட்டணியில் கிடைக்காவிட்டால் தனித்து போட்டி அல்லது மூன்றாவது அணியுடன் இணைந்து போட்டி என்ற முடிவை காங்கிரஸ் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதி பங்கீடு குறித்த இறுதி முடிவை இன்னும் எடுக்கவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனையில் கௌரவமான எண்ணிக்கையில் தொகுதி கிடைக்காவிட்டால் தனித்துப்போட்டி என்றும் அல்லது மூன்றாவது அணியில் சேர்ந்து போட்டியிடலாம் என்றும் பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவசர ஆலோசனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் பிரிந்து சென்றால் திமுகவுக்கு பின்னடைவு ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.