தமிழ்நாடு
ராகுல்காந்தி ஒரு தலைவரே இல்லை, அவர் ஒரு எம்பி, அவ்வளவு தான்: குஷ்பு
கடந்த சில நாட்களாக ராகுல் காந்தி குறித்து நடிகை குஷ்பு கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் ராகுல்காந்தி கடலில் மீனவர்களுடன் குதித்ததை கேலி செய்து கூறிய நடிகை குஷ்பு தற்போது ராகுல் காந்தி குறித்து மீண்டும் ஒரு விமர்சனத்தை வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு வரை ராகுல் காந்திதான் தலைவர் என்று கூறிக் கொண்டிருந்த குஷ்பு தற்போது அவர் ஒரு தலைவரே இல்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியபோது ’நான் ஆரம்பத்திலிருந்து கூறுவது எல்லாம் ராகுல் காந்தி அவர்கள் ஒரு தலைவர் கிடையாது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியில் உள்ள 44எம்பிகளில் அவரும் ஒரு எம்பி, அவ்வளவுதான். கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியின் காங்கிரஸ் எம்பி அவ்வளவுதான்
அவர் எப்படி ஒரு தலைவராக முடியும்? அவருக்கு எந்த ஒரு பொறுப்புணர்ச்சியும் இல்லை. அவர் தலைவர் என்றால் கட்சிக்கு தலைமை ஏற்க சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். குஷ்புவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்து அவரை விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.