தமிழ்நாடு
திமுகவுடனான பேச்சுவார்த்தை வெற்றி, 2 நாட்களில் ஒப்பந்தம்: கே.எஸ்.அழகிரி
திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தற்போது தொகுதி பங்கீடு தொடர்பான திமுகவுடனான பேச்சுவார்த்தை வெற்றி என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது என்றும் பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளிடையே பெருமளவு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்த ஒப்பந்தங்கள் இன்னும் இரண்டு நாளில் கையெழுத்தாகும் என்று அவர் தெரிவித்தார்.
திமுகவுடன் நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதி உடன்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதி முதல் 28 தொகுதி வரை கொடுக்கப்பட்டு இருப்பதாக திமுக மற்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் விருப்பமனு கொடுத்தவர்களிடம் நேர்காணம் செய்யப்படும் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.