தமிழ்நாடு
சபரிமலை சென்ற தமிழ் குடும்பம் மீது தாக்குதல்.. போலீஸ் வேடிக்கை!
திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலைக்குள் 40 வயது பெண் ஒருவருடன் செல்ல முயன்ற தமிழ் குடும்பம் மீது சபரிமலை போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
கோவிலுக்கு சென்னையில் இருந்து சென்று தமிழ்நாட்டு தம்பதிகள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். பழனி மற்றும் பஞ்சவர்ணம் தம்பதியினர் கோவிலுக்கு சென்று இருக்கிறார்கள்.
இதில் பஞ்சவர்ணத்திற்கு 40 வயதுதான் ஆகிறது என்பதால் அவரை வண்டியை விட்டு இறங்க சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அவர் வண்டியை விட்டு இறங்க மறுத்துள்ளார்.
இதையடுத்து அங்கு இருந் இந்துத்துவா அமைப்பினர் அவர்கள் இருவரையும் தாக்கி இருக்கிறார்கள். கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி தாக்கி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் போலீஸ் அந்த சம்பவம் நடக்கும் போது, அதை வேடிக்கை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. போராட்டக்காரர்களை போலீஸ் தடுக்கவில்லை என்று தெரிவிக்கிறார்கள்.