தமிழ்நாடு
லோக்சபா கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம்.. ஸ்டாலின் பேட்டி
சென்னை: நாடாளுமன்ற கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்துள்ளார்.
திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நடைபெற்று உள்ளது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடந்தது.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அதில், நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல் குறித்து உயர் நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்தோம். யாருடன் கூட்டணி வைப்பது குறித்து விவாதித்தோம். இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடந்தால் எப்படி சமாளிப்பது என்று ஆலோசனை நடத்தி வருகிறோம். இதுகுறித்து தோழமை கட்சிகளுடன் விவாதிப்போம்.
தமிழகத்தில் நடக்க உள்ள இடைத்தேர்தல்கள் குறித்தும் விவாதித்தோம். தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் இதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளார்.