தமிழ்நாடு
சென்னையில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட துணை ஜனாதிபதி!
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனை அடுத்து அவர் தகுதி உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் எந்தவித பயமும் தேவையில்லை என்றும் அவர் அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் பிரதமரை அடுத்து சற்று முன்னர் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் சென்னையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் துணை குடியரசுத்தலைவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பதும், இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடதக்கது.
சென்னையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள், பிரதமர் தடுப்பூசி போட்டுக் கொண்டதை அறிந்ததும் அவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மேலும் ஒரு சில பிரபலங்கள் விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது