கிரிக்கெட்
INDvENG- ‘4வது டெஸ்ட்ல ஜெய்ச்சே ஆகணும்’; ஆக்ரோஷ பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள்
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களில் முடிந்து விட்ட காரணத்தினால், இந்திய கிரிக்கெட் அணியினர் கிடைக்கும் அதிக நேரத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்றாவது போட்டியைப் போல நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியும் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் தான் நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 1 என்ற நிலையில் முன்னிலை வகித்துக் கொண்டிருக்கின்றது. கடைசி போட்டியிலும் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தன் இடத்தை உறுதி செய்துவிடும்.
4 வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் மாதம், 4 ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அது குறித்தான புகைப்படங்கள் இதோ:
#TeamIndia members gearing up for the fourth and final Test against England.@Paytm #INDvENG pic.twitter.com/7YmPyfUj6W
— BCCI (@BCCI) February 28, 2021