Connect with us

தமிழ்நாடு

தினகரனுக்கு எதிராக கொம்பு சீவப்படும் சிவசங்கரி: விரைவில் பிரஸ் மீட்!

Published

on

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தலைமை செய்தி தொடர்பாளராக இருந்தவர் வழக்கறிஞர் சிவசங்கரி. இவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நேற்று நீக்கியுள்ளார் தினகரன். இந்நிலையில் அவரை தினகரனுக்கு எதிராக பேச வைக்க சில முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதிமுகவில் இருந்து தினகரன் பிரிந்து அமமுக ஆரம்பித்ததில் இருந்து தினகரனுக்கு ஆதரவாக பேசி வந்தவர் சிவசங்கரி. இவர் ஓபிஎஸ், ஈபிஎஸ்-ஐ விவாதங்களில் வறுத்தெடுப்பதில் வல்லவர். இந்நிலையில் அவர் நேற்று தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் சபரிமலையில் பெண்கள் செல்வதில் என்ன தவறு என்ற கருத்தில் விவாதம் செய்தார்.

தினகரன் சபரிமலை விவகாரத்தில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில் சிவசங்கரி அதற்கு ஆதரவாக பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவரிடம் தினகரன் தரப்பில் இருந்து ஒருவர் போன் செய்து விளக்கம் கேட்டுள்ளார். அவர் தான் கட்சி சார்பாக பேசவில்லை எனவும், ஒரு வழக்கறிஞராக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக பேசியதாக விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால் இந்த விளக்கத்தை ஏற்காத அவர், நீங்க எதுக்காக எங்களை கேட்காமல் விவாதத்தில் போய் இப்படி பேசினீங்க என கூற, எல்லாத்துக்கும் உங்ககிட்ட சொல்லிட்டுதான் போகணுமா? சுதந்திரமா எதுவும் பேசக் கூடாதா? அடிமை கட்சியா நடத்துறீங்க? என எதிர்கேள்வி கேட்டுள்ளார் சிவசங்கரி. இதையெல்லாம் தனது போனில் ரெக்கார்டு செய்து அப்படியே தினகரனுக்கு அனுப்பியிருக்கிறார் அந்த நபர். அதன் பிறகு தான் தினகரன் சிவசங்கரியை நீக்கியுள்ளார்.

இதனையடுத்து திவாகரன் தரப்பும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் சிவசங்கரியை தொடர்பு கொண்டு தினகரனுக்கு எதிராக நீங்கள் பிரஸ் மீட் வைத்து பேச வேண்டும், அவரது முகத்திரையை நீங்கள் கிழிக்க வேண்டும், எந்த உதவி வேண்டுமானால் செய்ய தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளனர். இதற்கு ஆமோதித்த சிவசங்கரி விரைவில் பிரஸ் மீட் வைத்து தினகரனுக்கு எதிராக பேச உள்ளதாக தகவல்கள் கசிகிறது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா18 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்19 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!