தமிழ்நாடு
விஜயகாந்துடன் அதிமுக அமைச்சர்கள் சந்திப்பு: நாளை தொகுதி பங்கீடு!
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சுறுசுறுப்பாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
ஏற்கனவே பாஜக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிந்து விட்ட நிலையில் நாளை எத்தனை தொகுதிகள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது. மேலும் பாமகவுக்கு 23 தொகுதி அறிவிக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக தேமுதிகவுடன் நாளை தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதனை முன்னிட்டு தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்துடன் என்றும் அமைச்சர் கேபி முனுசாமி, அமைச்சர் தங்கமணி, அமைச்சர் எஸ்பி வேலுமணி ஆகியோர் சந்தித்தனர்.
தேமுதிக உடன் தொகுதி பங்கீடு பற்றி அதிமுக நாளை ஆலோசனை நடத்த உள்ளதாகவும் நாளையே தொகுதி எண்ணிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன