உலகம்
பிரான்ஸ் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 13 பேர் பலி.!
பிரான்சில் பெய்த கனமழையால், பிரான்ஸ் முழுவதுமாக வெள்ளத்தில் முழ்கியுள்ளது. வெள்ளத்தினால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளப்பெருக்கு அதிகமா இருப்பதினால் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு, பிரான்சஅரசாங்கம் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு வருகிறது.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்ற தனி சிறப்பு படைகளும் நியமிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தீவிரமா பிரான்ஸ் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. மேலும் 7 ஹெலிகாப்டர்கள், 700 பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சாலை மற்றும் விமான போக்குவரத்துக்கு பிரான்ஸ் நாட்டில் முற்றிலுமாக துணிபைக்கப்பட்டுள்ளது.