தமிழ்நாடு
9,10,11 வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி ஆல்பாஸ்: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் ஒரு சில தேர்வுகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இருப்பினும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த கால அட்டவணை சமீபத்தில் வெளியான நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் வெளியாகும் என்று கூறப்பட்டது.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் அந்த வகுப்பில் படித்து வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து 9, 10, 11ஆம் வகுப்புகளுக்கு தேர்வு இல்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு இன்றி தேர்ச்சி என்ற அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.