தமிழ்நாடு
பிரதமர் மோடிக்கு போட்டியாக திருக்குறள் படிக்கும் ராகுல்காந்தி!
தமிழகத்திற்கு வரும்போதும் சரி. தமிழகம் குறித்து பேசும் போதும் சரி திருக்குறளை அச்சுப் பிறழாமல் பேசி வருவதை பிரதமர் மோடி வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததே. மேலும் அவர் கூறும் ஒவ்வொரு திருக்குறளிலும் அன்றைய நிகழ்ச்சியில் அவர் பேசுவதற்கு தகுந்த வகையில் பொருத்தமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் பிறந்து வளர்ந்து பல ஆண்டுகளாக அரசியல் செய்பவர்கள் கூட துண்டு சீட்டுகளை வைத்துக்கொண்டு திக்கி திணறி படித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழே தெரியாத பிரதமர் மோடி தமிழில் திருக்குறளை எந்தவித துண்டுச் சீட்டும் இல்லாமல், பிசிறில்லாமல் பேசி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு போட்டியாக தற்போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் திருக்குறளை படித்தி வருவதாக தனது டுவிட்டரில் கூறியுள்ளார். திருக்குறளில் உள்ள ஆழ்ந்த கருத்துக்கள் தன்னை வியக்க வைத்ததாகவும் திருக்குறள் முழு புத்தகத்தையும் தான் தற்போது படித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இனிவரும் நாட்களில் ராகுல் காந்தியும் தனது மேடை பேச்சுகளில் திருக்குறளை உதாரணமாக கூறுவார் என்று எதிர்பார்க்கலாம்.
Have been reading "Tirukkural”. Am stunned by its depth.
Listening
Through your ears to hear, to listen and to understand.
Is to make gold of grain and golden grain of sand.
— Rahul Gandhi (@RahulGandhi) February 26, 2021