தமிழ்நாடு
விவசாயிகள் வாங்கிய நகைக்கடன்களும் தள்ளுபடி: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று மாலை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்குள் அவசர அவசரமாக ஒரு சில அறிவிப்புகளை சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து வருகிறார்
அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின்படி கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற நகை கடன்கள் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற ஆறு சவரன் வகையிலான நகை கடன் தள்ளுபடி என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார்
110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மகளிர் சுய உதவி குழு கடனும் தள்ளுபடி என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை இன்று மாலை நான்கு முப்பது மணிக்கு வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.