விளையாட்டு
அணியில் இடம் தரமாட்டீங்கல… புதிய அவதாரம் எடுத்த தினேஷ் கார்த்திக்!
தொடர்ந்து தினேஷ் கார்த்திக் தனது திறனை வெளிப்படுத்தி வந்த போதும் இந்திய அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியக் கிரிக்கெட் வீரர் ஆன தினேஷ் கார்த்திக் புதிதாக வர்ணனையாளர் அவதாரம் எடுத்துள்ளார். தற்போது இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நிறைவு பெற்றுள்ளது. அடுத்ததாக டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகள் தொடங்கப்பட உள்ளன.
இந்தியா- இங்கிலாந்து மோதும் டி20, ஒரு நாள் போட்டி தொடர்களை ஒளிபரப்பும் உரிமையை ஸ்கை ஸ்போர்ட்ஸ் டிவி சேனல் வாங்கியுள்ளது. இந்தப் போட்டிகளுக்குத் தான் தற்போது வர்ணனை செய்ய உள்ளார் தினேஷ் கார்த்திக். தற்போது தமிழக அணி கேப்டனாக இருந்து சமீபத்தில் தான் சையது அலி கோப்பையை தமிழக அணிக்காக வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டிகளுக்கான வர்ணனையாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒரே இந்தியர் ஆக தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார். மற்றபடி இந்தப் பட்டியலில் டேவிட் லாய்ட், நாசர் ஹுசைன், இயன் வார்ட், எபோனி ரெய்ன்போர்டு, மைக்கேல் அதர்டன், ராப் கீ மற்றும் ஸ்டுவார்ட் ப்ரோட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.