தமிழ்நாடு
இரவோடு இரவாக தமிழகத்தை விட்டே ஓடிவிட்டீர்கள்: ஸ்டாலின் குறித்து காயத்ரி ரகுராம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது நீங்களும் உங்கள் மகனும் இரவோடு இரவாக தமிழகத்தை விட்டே ஓடி விட்டீர்கள் என்று காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகையும், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும், பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராம் அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக குறித்தும் முக ஸ்டாலின் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் சற்று முன்னர் அவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளதாவது:
பாண்டிச்சேரியில் பெரும்பான்மை பலத்தை இழந்ததால் ராஜினாமா செய்ததை, நாராயணசாமி ஜனநாயகம் காக்க ராஜினாமா செய்துள்ளதாக பேசும் ஸ்டாலின் அவர்களே! உங்கள் தந்தையை நள்ளிரவில் கைது செய்தபோது இரவோடு இரவாக நீங்களும் உங்கள் மகனும் தமிழகத்தை விட்டே ஓடிவிட்டீர்கள்.
உங்கள் தந்தையை காத்தது பிஜேபி அரசு, கோமாவில் இருந்த உங்கள் மாமா மாறனை இறக்கும் வரை மத்திய அமைச்சராகவே பாதுகாத்தது பிஜேபி அரசுதான். அடக்கம் முடிந்த அடுத்த நொடியே நன்றி இல்லாமல் துரோகம் செய்தீர்கள். ஈழம் தொடங்கி தமிழகம் வரை தமிழர்களுக்கு தொடர் துரோகம் செய்து வரும் நீங்கள் ஜனநாயகம் குறித்தெல்லாம் பேசுவது வேடிக்கையானது’ என்று பதிவு செய்துள்ளார். காயத்ரி ரகுராமின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டிச்சேரியில் பெரும்பான்மை பலத்தை இழந்ததால் ராஜினாமா செய்ததை,
நாராயணசாமி
ஜனநாயகம் காக்க ராஜினாமா செய்துள்ளதாக பேசும் ஸ்டாலின் அவர்களே !
உங்கள் தந்தையை நள்ளிரவில் கைது செய்தபோது இரவோடு இரவாக நீங்களும் உங்கள் மகனும் தமிழகத்தை விட்டே ஓடிவிட்டீர்கள். 1/3 pic.twitter.com/JB1kutYbfw— Gayathri Raguramm ???????????? (@Gayatri_Raguram) February 22, 2021