Connect with us

கிரிக்கெட்

INDvENG – “அவங்க நம்மள பற்றி நினைக்கிறாங்களா?”- 3வது டெஸ்டுக்கு முன்னர் சீறிய ரோகித்; என்ன காரணம்??

Published

on

இந்தியா – இங்கிலாந்துக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதுவரை இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. அடுத்து வரும் இரு போட்டிகளும் குஜராத் மாநில அகமதாபாத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. 3வது போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்நிலையில் அங்குள்ள மைதானம் இந்திய அணிக்குச் சாதகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. தொடரில் வெல்வதற்காகவே இந்திய அணிக்குச் சாதகமாக பிட்ச் தயார் செய்யப்பட்டிருக்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தக் கருத்தைச் சாடி பேசியுள்ளார் இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா.

அவர் கூறுகையில், ‘ஒரு ஆட்டத்தில் பிட்ச் என்பது இரு அணிகளுக்கும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கப் போகிறது. அப்படி இருக்கும் போது, பிட்ச் குறித்தான விவாதம் எழுப்பப்படுவதற்கான அவசியம் என்னவென்பது குறித்து என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பல ஆண்டுகளாக இந்தியாவில் ஒரே மாதிரியாகத் தான் பிட்சுகள் தயார் செய்யப்படுகின்றன. அதில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. இருக்கவும் கூடாது என்று தான் நினைக்கிறேன்.

ஒரு அணி, தங்கள் தாய் மண்ணில் விளையாடும் போது, அதற்கு உண்டான சாதகங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறேன். நாங்கள் வேறொரு நாட்டுக்குப் பயணம் சென்று விளையாடுகையில், அந்த நாட்டுக்குச் சாதகமாகத் தான் அந்த பிட்சுகள் இருக்கும். அப்போது அவர்கள் நாங்கள் வருகிறோம் என்று கணக்கில் கொண்டு பிட்சுகளை அமைக்கிறார்களா? அப்படி இருக்கையில் இந்தியாவில் மட்டும் ஏன் அப்படி இருக்க வேண்டும் என்று பேசப்படுகிறது.

இது தான் சொந்த நாட்டில் விளையாடுவதற்கும், வெளிநாடுகளில் விளையாடுவதற்கும் உள்ள வேறுபாடு. அப்படி இருக்கக் கூடாது என்றால் ஐசிசி அமைப்பு, பிட்ச் உருவாக்குவதற்கு என்று சில சட்டத் திட்டங்களை வகுத்து எல்லோரையும் பின்பற்றச் செய்ய வேண்டும்.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒரு வீரரின் திறன் குறித்து விவாதம் செய்வது மற்றும் பேசுவது சரியாக இருக்கும். பிட்ச் பற்றிப் பேசுவது என்பது சரியானதாக இருக்காது’ என்று தெரிவித்துள்ளார்.

 

 

author avatar
seithichurul
தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்1 நாள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்1 நாள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்1 நாள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்1 நாள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்1 நாள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்1 நாள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்1 நாள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!