இந்தியா
திஷா ரவி கைது குறித்து கிரெட்டா தன்பர்க் டுவீட்!
![disha ravi2 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/disha-ravi2.jpg)
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் புதிய வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் சமீபத்தில் சர்வதேச பிரபலங்களான ரிஹான்னா, கிரெட்டா துன்பெர்க் உள்பட பலர் தங்களது ட்விட்டர் பக்கங்களில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.
குறிப்பாக கிரேட்டா துன்பெர்க் தனது டுவிட்டரில் இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் என்று பதிவு செய்து விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் இணைப்பையும் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் வெளிநாட்டு சதி ஏதும் உள்ளதா என காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் சமீபத்தில் விவசாயிகள் போராட்டம் குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளர் திஷா ரவி கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஏற்கனவே விவசாயிகள் போராட்டம் குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்த கிரேட்டா துன்பெர்க் தற்போது திஷா ரவி கைது குறித்து டுவிட் ஒன்றில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பேச்சு சுதந்திரம், அமைதியான எதிர்ப்பு, ஜனநாயக உரிமை ஆகியவை பேச்சுவார்த்தைக்கு மாறாக மனித உரிமைகள் என்றும் இவை எந்த ஒரு ஜனநாயகத்தின் அடிப்படை பகுதியாக இருக்க வேண்டும்’ என்றும் அவர் பதிவு செய்துள்ளார். கிரேட்டா துன்பர்க்கின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.